Saturday, November 21, 2009

விஜயை இயக்கும் சித்திக்



விட்டால் விஜய்  தனது 60 படத்துக்கும் இப்போதே இயக்குநரைப் பிடித்துப் போட்டுவிடுவார் போலிருக்கிறது. அவது 50 வது படம்  எஸ்பி ராஜ்குமார், 51வது படம் ஜெயம் ராஜா  என லைன் அப் பக்காவாக இருக்க, நடுவில் லிங்குசாமி, ரமணா, பேரரசு, செல்வராகவன் என இன்னும் சில இயக்குநர்களிடம் நாம சேர்ந்து படம் பண்ணியே ஆகணும் என்று அடம் பிடிக்கிறாராம் விஜய்.

இவர்களுக்கு நடுவில் மலையாள இயக்குநர் சித்திக்கும் முண்டா தட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார். ஏற்கெனவே விஜய்யை வைத்து ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கியவர்தான் இந்த சித்திக். இவருக்கு விஜய் எந்த நம்பரை ஒதுக்கிறாரென்று (அட... எத்தனையாவது படம்னு சொல்றோம்) இன்னும் உறுதியாகவில்லையாம்.

ஆனாலும் விஜய்யிடம் கதை சொல்லிவிட்டேன், விரைவில் எப்போது படம் துவங்குவதென்று அவர் அறிவிப்பார் என்றும் பழக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

இவர் ஒன்றும் விஜய்க்காக மெனக்கெட்டு கதையை உருவாக்கவில்லை. தான் ஏற்கெனவே மலையாளத்தில் திலீப்- நயன்தாராவை வைத்து எடுத்து வரும் பாடிகார்ட் படத்தையே பாலிஷ் போட்டு சொன்னாராம். விஜய்க்கு பரம திருப்தியாம்.