Thursday, February 4, 2010

தூத்துக்குடியில் விஜய் நடிக்கும் படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளரை பொதுமக்கள் தாக்க முயற்சி

தூத்துக்குடி,​​ ஜன.31:​ ​ தூத்துக்குடியில் விஜய் நடிக்கும் "சுறா' படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கும்,​​ ​ சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ​ ஏற்பட்டது.​ அப்போது பொதுமக்கள் கனல் கண்ணனை தாக்க முயன்றனர்.

​ நடிகர் விஜய் நடிக்கும் "சுறா' படப்பிடிப்பு தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த இரு ​ தினங்களாக நடைபெற்று வருகிறது.​ இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ​ தெர்மல்நகர் கடற்கரைப் பகுதியில் கடலில் விழுந்த மீனவர் ஒருவரை கடலோர காவல் படையினர் காப்பாற்றுவது போன்றும்,​​ அதனை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிடுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
​ இந்த படப்பிடிப்பை பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.​ அப்போது பொதுமக்களை ​ விலகிச் செல்லுமாறு சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.​ ​ அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.​ ​
இதைப் பார்த்த கனல் கண்ணன் அந்த நபரிடம் இருந்த செல்போனை பறித்து வீசினாராம்.
​ இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கனல் கண்ணனை சுற்றி வளைத்து தாக்க ​ முயன்றனராம்.​ இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினருக்கும்,​​ பொதுமக்களுக்கும் ​ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.​
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸôர் சம்பவ ​ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.​ ​ இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Bookmark and Share