Monday, March 29, 2010

திருச்சியில் 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை விஜய் நேற்று நடத்தி வைத்தார்

திருச்சியில் 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை விஜய் நேற்று நடத்தி வைத்தார்.
திருச்சி மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்க கவுரவ தலைவர் வீரா&ஷாலினி திருமணம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய், அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் நடத்தி வைத்தார்.
புதுமண தம்பதிகளுக்கு விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், 52 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். தொடர்ந்து விஜய் நற்பணி இயக்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி பள்ளியும் துவக்கப்பட்டது.
விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:
தனக்கு மட்டுமே திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்கள் மத்தியில் தன் திருமண மேடையிலேயே 24 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கும் பி.எஸ்.வீரா பாராட்டுக்குரியவர். எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவது எனது படங்களின் வெற்றி இல்லை. ரசிகர்களாகிய உங்களது உற்சாகம் தான். ஒரு படம் நடித்து முடிக்க 6 அல்லது 7 மாதம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. இடையிடையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ரசிகர்களை பார்க்கும்போதுதான் டானிக் சாம்பிட்டதை போல் உற்சாகம் கிடைக்கிறது. இவ்வாறு விஜய் பேசினார்