Friday, January 8, 2010

2011-க்கு பிறகு அவார்டு படஙகளில் விஜய் நடிப்பார்-SAC


திண்டுக்கல்,​​ ஜன.​ 6:​ 2011-ம் ஆண்டுக்குப் பின்னரே அவார்டு படங்களில் நடிகர் விஜய் நடிப்பார் என,​​ திரைப்பட இயக்குநரும்,​​ நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.​ சந்திரசேகர் தெரிவித்தார்.

​ ​ ​ ​ திண்டுக்கல் மாவட்டம்,​​ ஆத்தூர் வட்டம் காமராஜர் சாகர் அணைக்கட்டில் அவர் புதியதாக இயக்கும்  வெளுத்துக்கட்டு படப்பிடிப்புக்காக,​​ இயக்குநர் சந்திரசேகர் வந்திருந்தார்.​ அப்போது,​​ அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
​ ​ ​ ​ நடிகர் விஜய்,​​ ரஜினியின் பார்முலாவை பின்பற்றுகிறார்.​ ரஜினியின் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்களாகவே இருப்பது உண்டு.​ அதேபோல்,​​ நடிகர் விஜய் படங்களும் வசூலில் வெற்றி பெற்று வருகிறது.
​ ​ ​ ​ விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை.​ வேட்டைக்காரன் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.​​ ​ 2011-ம் ஆண்டுக்குப் பிறகே விஜய் நடிக்கும் அவார்டு படங்கள் தயாரிக்கப்படும் என்றார் அவர்.
source:dinamai
Bookmark and Share