Tuesday, January 5, 2010

வேட்டைக்காரன் திருட்டு சிடி வேட்டை விஜய் ரசிகர்களுடன் போலீசார் அதிரடி


ஈரோடு கடைகளில் வேட்டைக்காரன் உட்பட புதுப்பட சிடிக்கள் விற்பனைக்காக வைத்திருந்தனர். விஜய் ரசிகர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அதை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோடு பகுதியில் இரண்டு கடைகளில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வேட்டைக்காரன் மற்றும் புதுப்படங்களின் திருட்டு சி.டி.க்கள் விற்கப்படுவதாக, ஈரோடு மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. அவர், அந்த கடைகளுக்கு சி.டி. வாங்குவது போல 2 பேரை அனுப்பினார். அங்கு வேட்டைக்காரன் உட்பட பல புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
கருங்கல்பாளையம் போலீசாருக்கு பாலாஜி தகவல் தெரிவித்துவிட்டு, மாவட்ட செயலாளர் ராஜ்நாராயணன், மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் தனசேகர் மற்றும் நிர்வாகிகளை அந்தக் கடைகளுக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் சென்று பார்த்தபோது அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.டி.க்கள் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார் திருட்டு சி.டி.க்கள் விற்பனை செய்ததாக கடை ஊழியர்கள், பவானியை சேர்ந்த ரவி(28), ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ்(21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கடை உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Bookmark and Share