Tuesday, December 29, 2009

சரித்திரப் பின்னணியில் விஜய்க்கான கதை


தெலுங்கு நாடோடிகள் முடிந்துவிட்டது. அடுத்து சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அத்துடன் கன்னடத்தில் நாடோடிகளை தனது அசிஸ்டெண்டை வைத்து இயக்கும் வேலையையும் தொடங்கியிருக்கிறார்.

இதுவரை சின்னச் சின்ன நடிகர்களை வைத்து படம் இயக்கிய சமுத்திரக்கனி (ஒரே முறை விஜயகாந்தையும் இயக்கியிருக்கிறார்) தனது பார்வையை மாஸ் ஹீரோக்களின் பக்கம் திருப்பியிருக்கிறார். முக்கியமாக விஜய்க்கு கதை சொல்லப் போகிறாராம்.

சரித்திரப் பின்னணியில் ஒரு அதிரடி கதையை தயார் செய்து வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. அந்தக் கதையைதான் விஜய்யிடம் சொல்லப் போகிறாராம்.

ஏற்கனவே ஜெயம் ராஜா, லிங்குசாமி விஜய்யிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.